காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பாலிவுட் நடிகையான திஷா பதானி, தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய லோபர் என்ற படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று விட்டார். அதையடுத்து தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடித்து வரும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் திஷா பதானி . அந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42 வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் .
இந்த படம் குறித்து திஷா பதானி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் சூர்யாவுடன் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. இப்படம் சரித்திர கதையில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. இதுவரை வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடித்து வந்த நான் இந்த படத்தில் முதல் முறையாக ஒரு தனித்துவமான ஹீரோயினாக நடிக்கிறேன். ஒரு மகத்தான படத்தில் மாறுபட்ட வேடத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் திஷா பதானி.