இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகையான திஷா பதானி, தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய லோபர் என்ற படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று விட்டார். அதையடுத்து தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடித்து வரும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் திஷா பதானி . அந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42 வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் .
இந்த படம் குறித்து திஷா பதானி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் சூர்யாவுடன் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. இப்படம் சரித்திர கதையில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. இதுவரை வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடித்து வந்த நான் இந்த படத்தில் முதல் முறையாக ஒரு தனித்துவமான ஹீரோயினாக நடிக்கிறேன். ஒரு மகத்தான படத்தில் மாறுபட்ட வேடத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் திஷா பதானி.