சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

தற்போது கமல் நடிக்கும் இந்தியன் -2 , ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை அடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு சரித்திர படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக கொண்டு அந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் அப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகும் நிலையில், அடுத்து ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படத்திலும் சரித்திர கதையிலேயே நடிக்கப்போகிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.




