‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தற்போது கமல் நடிக்கும் இந்தியன் -2 , ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை அடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு சரித்திர படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக கொண்டு அந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் அப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகும் நிலையில், அடுத்து ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படத்திலும் சரித்திர கதையிலேயே நடிக்கப்போகிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.