வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தற்போது கமல் நடிக்கும் இந்தியன் -2 , ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை அடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு சரித்திர படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக கொண்டு அந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் அப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகும் நிலையில், அடுத்து ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படத்திலும் சரித்திர கதையிலேயே நடிக்கப்போகிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.




