'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' |

தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தனுசை பிரியப்போவதாக அறிவித்த பிறகு ஹிந்தி படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, கோவில்களில் வழிபாடு நடத்தும் வீடியோக்கள் மற்றும் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் தற்போது சில கோப்புகள் அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு பேனாவைக் கொண்டு கதை எழுதுவது ஒருவித உணர்வு. முதன்முதலாக கதையை எழுதிவிட்டு இரண்டாவதாக தட்டச்சு செய்யும்போது சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாகும். காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் போது அதில் இருந்து ஒரு பேப்பரைக் கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் போது அதில் ஏதாவது புதிய சிந்தனை வரலாம். அதனை அப்டேட் செய்து கொண்டிருக்கவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.