மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தனுசை பிரியப்போவதாக அறிவித்த பிறகு ஹிந்தி படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, கோவில்களில் வழிபாடு நடத்தும் வீடியோக்கள் மற்றும் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் தற்போது சில கோப்புகள் அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு பேனாவைக் கொண்டு கதை எழுதுவது ஒருவித உணர்வு. முதன்முதலாக கதையை எழுதிவிட்டு இரண்டாவதாக தட்டச்சு செய்யும்போது சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாகும். காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் போது அதில் இருந்து ஒரு பேப்பரைக் கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் போது அதில் ஏதாவது புதிய சிந்தனை வரலாம். அதனை அப்டேட் செய்து கொண்டிருக்கவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.