ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்' நாவல் அதே பெயரில் படமாக இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செப்., 30ல் முதல்பாகம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி, அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடிக்கும் திரிஷா உள்ளிட்டோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. தொடர்ந்து டீசர், இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து செப்., 6ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேலும் சில நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமியும், வானதியாக சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தனாக ரகுமானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.




