எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம், பிசாசு- 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான இவர் அடுத்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ‛பொன்மாலைப் பொழுது' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் என்னுடைய இசையில் உருவையான பாடல்கள் மட்டுமே பாடப்படும். ராயல்டி பிரச்னைகள் இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இடம்பெறாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹரிஹரன், சாதனா சர்க்கம் ஆகியோர் பங்கேற்றாலும் ஹிந்தி பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறாது. தமிழ் பாடல்கள் மட்டுமே முழுக்க முழுக்க இடம்பெறும் என்று தெரிவித்திருக்கும் கார்த்திக் ராஜா, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாத்திய கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.