வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மாணிக்கம், அலெக்சாண்டர், உல்லாசம், பிசாசு- 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான இவர் அடுத்த மாதம் 24ம் தேதி திருச்சியில் ‛பொன்மாலைப் பொழுது' என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் என்னுடைய இசையில் உருவையான பாடல்கள் மட்டுமே பாடப்படும். ராயல்டி பிரச்னைகள் இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இடம்பெறாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹரிஹரன், சாதனா சர்க்கம் ஆகியோர் பங்கேற்றாலும் ஹிந்தி பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறாது. தமிழ் பாடல்கள் மட்டுமே முழுக்க முழுக்க இடம்பெறும் என்று தெரிவித்திருக்கும் கார்த்திக் ராஜா, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாத்திய கலைஞர்கள் அனைவருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.