'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பயணித்து வருகிறார். கடந்தவாரம் தனுஷ் உடன் இவர் நடித்து வெளியான ‛திருச்சிற்றம்பலம்' படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களில் நடித்து வரும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் இவருக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கம் இருந்ததாக தகவல்கள் வந்தன. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன்படி தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து சென்னை எம்ஜிஎம் மருத்துமனைக்கு டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று(ஆக.,25) மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜாவிற்கு நெஞ்சில் சளி உள்ளது. நன்றாக பேசுகிறார். அடையாளம் காண்கிறார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என அவரை மருத்துவமனையில் சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.