‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள காப்பா என்கிற படத்தில் முதன்முறையாக திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரித்விராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான் என்றாலும் சினிமாவுக்காக கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்ட மிக நீண்ட நடை மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் பிரித்விராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், கல்லூரியில் தான் படித்தபோது, இதே மார்க்கெட் வீதிகளில், பலமுறை பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்றதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கி அவர்களின் கண்டிப்புக்கு ஆளானதாகவும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் திருவனந்தபுரம் தனது சொந்த ஊர் என்றாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்ததில்லை என்றும் தற்போது தான் நடித்து வரும் காப்பா என்கிற படத்தில் தனது சொந்த ஊர் பாஷையை பேசி நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.