இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' |

தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள காப்பா என்கிற படத்தில் முதன்முறையாக திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரித்விராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான் என்றாலும் சினிமாவுக்காக கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்ட மிக நீண்ட நடை மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் பிரித்விராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், கல்லூரியில் தான் படித்தபோது, இதே மார்க்கெட் வீதிகளில், பலமுறை பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்றதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கி அவர்களின் கண்டிப்புக்கு ஆளானதாகவும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் திருவனந்தபுரம் தனது சொந்த ஊர் என்றாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்ததில்லை என்றும் தற்போது தான் நடித்து வரும் காப்பா என்கிற படத்தில் தனது சொந்த ஊர் பாஷையை பேசி நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.




