டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சென்னை-28, சத்தம் போடாதே, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவர் கடந்த ஞாயிறு இரவு தான் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென எதிர்பாராத விதமாக மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நடிகர் நிதின் சத்யாவும் தனது காரில் பயணித்த போது ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டருகே உள்ள சிக்னலில் மாட்டிக்கொண்டார்.
அந்த சமயத்தில் நிதின் சத்யாவுக்கு சற்று அருகிலிருந்த மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அதேசமயம் நிதின் சத்யா அந்த விபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள நிதின் சத்யா மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மழை நேரத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அவர் அதில் கொடுத்துள்ளார்.