22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சென்னை-28, சத்தம் போடாதே, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவர் கடந்த ஞாயிறு இரவு தான் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென எதிர்பாராத விதமாக மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நடிகர் நிதின் சத்யாவும் தனது காரில் பயணித்த போது ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டருகே உள்ள சிக்னலில் மாட்டிக்கொண்டார்.
அந்த சமயத்தில் நிதின் சத்யாவுக்கு சற்று அருகிலிருந்த மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அதேசமயம் நிதின் சத்யா அந்த விபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள நிதின் சத்யா மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மழை நேரத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அவர் அதில் கொடுத்துள்ளார்.