உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

கொரோனா தாக்கம் வந்த பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகமாகியது. திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். தியேட்டர்களில் வெளியான படங்களும் நான்கு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால், தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகை குறைவடைய ஆரம்பித்தது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் திண்டாட ஆரம்பித்தன.
இந்நிலையில் ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தினார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் காரணமாக தற்போது சில புதிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
அதன்படி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பின்பு நான்கு வாரங்களுக்குப் பதிலாக எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்களாம். பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்ற முறைதான் உள்ளது. தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் மாற்றம் வந்துள்ளதை அடுத்து அது தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது விரைவில் தெரியும்.