நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
கொரோனா தாக்கம் வந்த பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகமாகியது. திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். தியேட்டர்களில் வெளியான படங்களும் நான்கு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால், தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகை குறைவடைய ஆரம்பித்தது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் திண்டாட ஆரம்பித்தன.
இந்நிலையில் ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தினார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் காரணமாக தற்போது சில புதிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
அதன்படி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பின்பு நான்கு வாரங்களுக்குப் பதிலாக எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்களாம். பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்ற முறைதான் உள்ளது. தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் மாற்றம் வந்துள்ளதை அடுத்து அது தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது விரைவில் தெரியும்.