அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா தற்போது அவருடன் அவ்வப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா.
அதேபோல தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்த நயன்தாரா, அந்த படத்தில் தனது காட்சிகளை சமீபத்தில் முடித்து கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர்-3௦ல் வெளியாக இருக்கிறது. இது தவிர அகிலன் என்கிற படத்தை முடித்துவிட்ட ஜெயம் ரவி, இறைவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.