இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா தற்போது அவருடன் அவ்வப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா.
அதேபோல தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்து வரும் இறைவன் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வந்த நயன்தாரா, அந்த படத்தில் தனது காட்சிகளை சமீபத்தில் முடித்து கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர்-3௦ல் வெளியாக இருக்கிறது. இது தவிர அகிலன் என்கிற படத்தை முடித்துவிட்ட ஜெயம் ரவி, இறைவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.