சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கடந்த 2007ம் வருடம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சிவாஜி தி பாஸ். இந்த படம் வசூல் ரீதியாக பல வித சாதனைகளை செய்ததோடு தமிழ் சினிமாவை இந்திய அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த படம் 3-டிக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.
பிரம்மாண்ட வெற்றி படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் சிவாஜி படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவானால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன், தற்போது சிவாஜி படத்திற்கு இரண்டாம் பாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் அதற்கான சரியான கதை அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.