பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
கடந்த வருடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் முதல் பாகமாக வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சேர்த்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மற்றும் ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தா ஆகியோரின் நடனங்கள் மற்றும் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்த பஹத் பாசிலின் நடிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன..
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற பஹத் பாசில் இந்த படத்திலும் தொடர்கிறார். அதே சமயம் இந்த படத்தில் விஜய்சேதுபதி இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி குழுவினரின் தரப்பிலிருந்து படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து புஷ்பா-2வில் விஜய்சேதுபதி-பஹத் பாசில் கூட்டணியை காண்பதற்கு ஆவலாக இருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.