காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
கடந்த வருடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் முதல் பாகமாக வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சேர்த்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மற்றும் ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தா ஆகியோரின் நடனங்கள் மற்றும் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்த பஹத் பாசிலின் நடிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன..
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற பஹத் பாசில் இந்த படத்திலும் தொடர்கிறார். அதே சமயம் இந்த படத்தில் விஜய்சேதுபதி இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி குழுவினரின் தரப்பிலிருந்து படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து புஷ்பா-2வில் விஜய்சேதுபதி-பஹத் பாசில் கூட்டணியை காண்பதற்கு ஆவலாக இருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.