நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் உருவானது. கமலஹாசன், கவுதமி முக்கிய வேடத்தில் நடித்தார்கள். தமிழில் வெற்றி பெற்ற அப்படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போவதாக மலையாள சினிமாவில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடங்கிவிட்டதாகவும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அணில் ஆகியோரே மூன்றாம் பாகத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.