‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

சூர்யா இயக்கி, தயாரித்திருந்த படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்னி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனே நீக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.