7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கணவர் இறந்த பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். கடந்தவாரம் 90களில் முன்னணி கதாநாயகிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார் மீனா.
இந்நிலையில் இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்களை பகிர்ந்து ‛அழகிய உள்ளங்களுடன் இனிய காலை பொழுது'' என பதிவிட்டுள்ளார். கணவர் இறந்த பின் முதன்முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளார் மீனா. இருப்பினும் அவரது முகத்தில் இன்னும் கணவரை இழந்த சோகம் மறையவில்லை என்பதை போட்டோவை பார்க்கும்போதே தெரிகிறது. கணவர் இழப்பிலிருந்து மீனா மெல்ல மெல்ல மீண்டும் வருகிறார்.