இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கணவர் இறந்த பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். கடந்தவாரம் 90களில் முன்னணி கதாநாயகிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார் மீனா.
இந்நிலையில் இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்களை பகிர்ந்து ‛அழகிய உள்ளங்களுடன் இனிய காலை பொழுது'' என பதிவிட்டுள்ளார். கணவர் இறந்த பின் முதன்முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளார் மீனா. இருப்பினும் அவரது முகத்தில் இன்னும் கணவரை இழந்த சோகம் மறையவில்லை என்பதை போட்டோவை பார்க்கும்போதே தெரிகிறது. கணவர் இழப்பிலிருந்து மீனா மெல்ல மெல்ல மீண்டும் வருகிறார்.