லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நம் நாடு 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் ஆக., 2 முதல் தங்களின் முகப்பு போட்டோவாக தேசிய கொடியை வைக்கும் படியும், நாட்டு மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீட்டின் முன்பு தேசிய கொடியையும் ஏற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து பிரதமரும் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மூவர்ணக் கொடியின் படத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களின் முகப்பு போட்டோவில் மூவர்ணக் கொடியை வைத்தனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அதை தொடர்ந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி கலைஞர்களும் தங்களின் சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மாற்றினர். ஆனால் தமிழில் செல்வராகவன் உள்ளிட்ட வெகு சிலரே அப்படி செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட கலைஞர்கள் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் இதை தொடர்ந்து வருகின்றனர். திரையுலகினர் சிலரும் மாற்றி உள்ளனர்.