ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நம் நாடு 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் ஆக., 2 முதல் தங்களின் முகப்பு போட்டோவாக தேசிய கொடியை வைக்கும் படியும், நாட்டு மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீட்டின் முன்பு தேசிய கொடியையும் ஏற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து பிரதமரும் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மூவர்ணக் கொடியின் படத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களின் முகப்பு போட்டோவில் மூவர்ணக் கொடியை வைத்தனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அதை தொடர்ந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி கலைஞர்களும் தங்களின் சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மாற்றினர். ஆனால் தமிழில் செல்வராகவன் உள்ளிட்ட வெகு சிலரே அப்படி செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட கலைஞர்கள் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் இதை தொடர்ந்து வருகின்றனர். திரையுலகினர் சிலரும் மாற்றி உள்ளனர்.