'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
நம் நாடு 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் ஆக., 2 முதல் தங்களின் முகப்பு போட்டோவாக தேசிய கொடியை வைக்கும் படியும், நாட்டு மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீட்டின் முன்பு தேசிய கொடியையும் ஏற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து பிரதமரும் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மூவர்ணக் கொடியின் படத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களின் முகப்பு போட்டோவில் மூவர்ணக் கொடியை வைத்தனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அதை தொடர்ந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி கலைஞர்களும் தங்களின் சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மாற்றினர். ஆனால் தமிழில் செல்வராகவன் உள்ளிட்ட வெகு சிலரே அப்படி செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட கலைஞர்கள் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் இதை தொடர்ந்து வருகின்றனர். திரையுலகினர் சிலரும் மாற்றி உள்ளனர்.