அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
70களின் துவக்கத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் ஜெயசுதா. தெலுங்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில் “அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட சில படங்கள் அவர் நடித்த முக்கியமான படங்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஜெயசுதா பின்னர் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். 2001ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009ல் செகந்தராபாத் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன் பின் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயசுதா சமீபத்தில் தெலங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான ஏடெலா ராஜசேகரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன் பின் பாஜகவில் இணைய சம்மதித்துள்ளதாகவும் விரைவில் சேர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜகவில் ஏற்கெனவே தெலுங்குத் திரையுலகின் முன்னாள் முன்னணி கதாநாயகியான விஜயசாந்தியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல நட்சத்திரங்களும் பாஜகவில் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது ஜெயசுதாவும் இணைய உள்ளார்.