என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'செம்பருத்தி'. 1400 எபிசோடுகளை கடந்த இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி அண்மையில் பிரம்மாணடமாக படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சீரியலின் வெற்றி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முக்கிய நடிகர்கள் அனைவரையும் குறித்து மேடையில் பேசப்பட்டது. ஆனால், வில்லியாக நடித்திருந்த வீஜே மவுனிகாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த வீஜே மவுனிகா தனது இன்ஸ்டாவில் இதை குறிப்பிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், 'செம்பருத்தி தொடருக்காக எனது பெஸ்டை கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு அதை திருப்பி தரவில்லை. நீங்கள் செம்பருத்தி தொடரின் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டாடினீர்கள். ஆனால், என்னை ஏன் மதிக்கவில்லை?. என்னை ஏன் அழைக்கவில்லை?. எங்கே எனக்கான விருது?. நீங்கள் என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள். ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர், கொண்டாடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி' என கூறியுள்ளார்.
வீஜே மவுனிகா செம்பருத்தி தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்து கொடுத்துள்ளார். அப்படியிருக்க ஒரு சீரியலின் வில்லி நடிகைக்கு எப்படி தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்காமல் போனது என பலரும் மவுனிகாவிற்கு ஆதரவாக கேள்வி கேட்டு வருகின்றனர்.