விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
மாஜி ஹீரோயின்களான குஷ்புவும், ரம்பாவும் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடா நாட்டுக்கு சென்றபோதும் அவர்களின் நட்பு விட்டுப்போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் சென்னை வந்தபோது தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குஷ்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது தோழி ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவருடன் பிரியாணி சாப்பிட்டதும் அவரது குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.