அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
மாஜி ஹீரோயின்களான குஷ்புவும், ரம்பாவும் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடா நாட்டுக்கு சென்றபோதும் அவர்களின் நட்பு விட்டுப்போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் சென்னை வந்தபோது தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குஷ்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது தோழி ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவருடன் பிரியாணி சாப்பிட்டதும் அவரது குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.