சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்கும் புதிய படத்தை வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக புதுமுகம் நடிக்கிறார்.
டிக்கிலோனா படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் பீம் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.
கன்னடத்தில் அறிமுகமான ஷெரின் கான்ஞ்சனவாலா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழக்கு வந்தார். அதன்பிறகு சந்தானம் ஜோடியாக டிக்கிலோனா படத்தில் நடித்தார், தற்போது யோகிபாபுவுடன் சூ கீப்பர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.