வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
கமலுக்கு எழுந்துள்ள விஸ்வரூபம் பட பிரச்னைக்கு திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷூம் தன் பங்கிற்கு உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர் கமல். அருக்கே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று எண்ணும்போது கஷ்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டை விட்டே அவர் போகிறேன் என்று அவர் சொன்னதும் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது என்று கூறியுள்ளார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பேசும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. சினிமாவுக்காக வாழ்பவர் கமல். அவரது பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.