விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டான்' படம் வியாபார ரீதியில் லாபமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படம் அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21 படம் பற்றிய அறிவிப்பும் பொங்கல் தினத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏழு மாதங்களாகியும் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமாக 'மாவீரன்' படத்தின் அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் எத்தனையாவது படம் என அறிவிக்காமல், சிவகார்த்திகேயயின் அடுத்த படம் என்றே அறிவித்தார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று(ஆக., 3) முதல் ஆரம்பிக்க உள்ளார்களாம்.
அப்படி என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் 21வது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.