ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டான்' படம் வியாபார ரீதியில் லாபமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படம் அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21 படம் பற்றிய அறிவிப்பும் பொங்கல் தினத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏழு மாதங்களாகியும் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமாக 'மாவீரன்' படத்தின் அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் எத்தனையாவது படம் என அறிவிக்காமல், சிவகார்த்திகேயயின் அடுத்த படம் என்றே அறிவித்தார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று(ஆக., 3) முதல் ஆரம்பிக்க உள்ளார்களாம்.
அப்படி என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் 21வது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.