பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராவதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தை தமிழில்தான் தயாரிக்கிறோம் எனச் சொல்லி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர்களின் சில சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளை 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தான் நடத்தினார். தற்போது அவரே ஸ்டிரைக்கை மீறி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி படப்பிடிப்பை நடத்துவதை மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம்.
அவரைப் போலவே தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் தயாரிப்பாளரான நாகவம்சியும் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியமான ஒரு உறுப்பினர். இதனால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம்.