வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
பாலிவு நடிகர் ரன்வீர் சிங் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே கணவரின் நிர்வாணத்தை புகழ்ந்தார், ஆனால் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். வட நாட்டில் பல இடங்களில் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டமும் நடந்த வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்தூரை சேர்ந்த இன்னொரு தொண்டு நிறுவனமான'நேகி கீ திவார்' ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத ஆடைகளை போடுவதற்கு டொனேஷன் பாக்சையும் திறந்திருக்கிறது.