முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல், விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் படங்களை இயக்கினார். இதில் வானம் வசப்படும் தோல்வியை சந்தித்தது. மற்றும் அந்த படத்தின் ஒளிப்பதிவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்த நிலையில் இனி படம் இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் பேட்டியளித்துள்ள பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நானும் இயக்குனராகும் ஆசையில் சில படங்களை இயக்கினேன். ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. ஒரு படத்தை இயக்குவது வேறு, ஒளிப்பதிவு செய்வது வேறு என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இயக்குனர் என்பவர் அனைத்து துறைகளையும் கையாள வேண்டும், அது என்னால் முடியவில்லை. அதனால் இனி படம் இயக்கப்போவதில்லை.
ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறேன். முழு கதையும் எனக்கு சொல்லப்பட வேண்டும், அந்த கதை எனக்கு பிடிக்க வேண்டும். எனது பணிக்கு முழு சுதந்திரம் வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பணி செய்வேன்.
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.