என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடைபெறுவதை அறிந்த என்சிபி அதிகாரிகள், இது தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் என்சிபி தரப்பில் சுமார் 6,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆர்யன் கான் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதனால் ஆர்யன்கான் விடுதலை செய்யப்பட்டார். ஆர்யன்கான் சும்மா விருந்துக்குதான் சென்றார் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று அதற்கு விளக்கம் சொன்னார்கள்.
இந்த நிலையில் மும்பையில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் ஆர்யன் கலந்து கொண்டதாக நேற்று ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஆர்யன்கான் கருப்பு சட்டை அணிந்து சரக்கு பார்ட்டியில் பங்கேற்ற காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.