என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலையும், லாபத்தையும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை என்பது உண்மை. 'டி பிளாக், ராக்கெட்ரி, யானை' ஆகியவை மட்டும் மிகச் சுமாரான வசூலைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அந்தப் படங்கள் ஒரு வாரம் கூட முழுதாகத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.
வாரா வாராம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அடுத்து என்ன பெரிய படம் வரும் என தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. அவற்றின் வியாபாரங்களும் மிகவும் மந்தமாக இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படம் இரண்டு, மூன்று நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.