தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்த தொடர் மீரா. கடந்த மார்ச் 28 முதல் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான மற்றும் இனிமையான உறவுகள் குறித்த அனுபவங்கள் கதையாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனை குஷ்பு தனது அவ்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்தார். குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், அக்ஷயாக உள்பட பலர் நடித்தார்கள். கதையை குஷ்பு எழுத, ஏ.ஜவஹர் இயக்கினார். 62 எபிசோட்களே ஒளிபரப்பான நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக குஷ்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது: எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும். வந்துவிட்டது. நாம் தொடர விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. எனது குழுவுடன் மீண்டும் வருவேன். அதுவரை காத்திருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.




