ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்த தொடர் மீரா. கடந்த மார்ச் 28 முதல் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான மற்றும் இனிமையான உறவுகள் குறித்த அனுபவங்கள் கதையாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனை குஷ்பு தனது அவ்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்தார். குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், அக்ஷயாக உள்பட பலர் நடித்தார்கள். கதையை குஷ்பு எழுத, ஏ.ஜவஹர் இயக்கினார். 62 எபிசோட்களே ஒளிபரப்பான நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக குஷ்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது: எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும். வந்துவிட்டது. நாம் தொடர விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. எனது குழுவுடன் மீண்டும் வருவேன். அதுவரை காத்திருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.