சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விலகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாகப் பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு வந்தனர். அதனால்தான் சமந்தா மனமுடைந்து இப்படி சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சமந்தா. அடிக்கடி சுவாரசியமாக ஏதாவது ஒரு பதிவிட்டு வருவார். தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்றும் தெரிகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் விலகியிருக்கலாம் என்கிறார்கள்.