'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விலகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாகப் பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு வந்தனர். அதனால்தான் சமந்தா மனமுடைந்து இப்படி சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சமந்தா. அடிக்கடி சுவாரசியமாக ஏதாவது ஒரு பதிவிட்டு வருவார். தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்றும் தெரிகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் விலகியிருக்கலாம் என்கிறார்கள்.