ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கனவே தான் நடித்து சூப்பர் ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தை அடுத்து மலையாளத்தில் மாலிக் உட்பட பல படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்.
இந்த படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்ததால் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மலையாள சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் சுசின் ஷ்யாம் என்பவர் இசையமைக்க இருக்கிறாராம்.
அந்த வகையில் கமலின் புதிய படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று விக்ரம் படத்தில் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சில மலையாள நடிகர்கள் நடித்தது போன்று கமலின் புதிய படத்திலும் மலையாளத்தில் பிரபலமான சில நடிகர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.