காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் பின்னணி இசைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டு கிடைத்து வருகிறது. அதிலும் டீசரில் இடம் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சோழர் காலத்து கதையில் உருவாகி இருப்பதால் அந்த காலகட்டத்தின் இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து அதற்கான பின்னணி இசையை ரகுமான் அமைத்திருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமாக சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்பட்டம், கொம்பு, பஞ்சமுக வாத்தியம் உள்பட பல இசைக்கருவிகளை இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார் ரகுமான். ஆனால் சோழர் காலத்தைச் சார்ந்த பல இசைக்கருவிகள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் சில இசை கருவிகளை தாய்லாந்து நாட்டில் வாங்கி வந்து பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படி சோழர் காலத்தை திரை வடிவப்படுத்தி இருக்கும் மணிரத்னத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை வாங்கி வந்து முழுக்க முழுக்க ஒரிஜினல் கருவிகளை வைத்தே பின்னணி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.




