காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சுழல் வெப் தொடர் மற்றும் தியேட்டர்களில் வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் பின்னணி இசை பற்றி பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அமைகிற படம் எல்லமே கொலை, கொள்ளை நிறைந்த டார்க் ஜானர் படங்களாக இருக்கிறது. அவற்றில் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் பாடலின் வெற்றியின் மூலமே ஒரு இசை அமைப்பாளர் கவனிக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார் என்பதுதான் இன்றையநிலை. அந்த வகையில் எனக்கு வருத்தம் உண்டு. இப்போதுள்ள நவீன டெக்னாலஜியை கொண்டு ஒரு உருப்படாத பாடலை கூட 50 லட்சம் வரை செலவு செய்து செயற்கையாக ஹிட்டாக்கி விட முடியும். அதை செய்ய நான் தயாராக இல்லை. பாடலுக்கான வாய்ப்புகள் வரும்போது நானும் கொண்டாடப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் சாம் சி.எஸ்.




