வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சுழல் வெப் தொடர் மற்றும் தியேட்டர்களில் வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் பின்னணி இசை பற்றி பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அமைகிற படம் எல்லமே கொலை, கொள்ளை நிறைந்த டார்க் ஜானர் படங்களாக இருக்கிறது. அவற்றில் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் பாடலின் வெற்றியின் மூலமே ஒரு இசை அமைப்பாளர் கவனிக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார் என்பதுதான் இன்றையநிலை. அந்த வகையில் எனக்கு வருத்தம் உண்டு. இப்போதுள்ள நவீன டெக்னாலஜியை கொண்டு ஒரு உருப்படாத பாடலை கூட 50 லட்சம் வரை செலவு செய்து செயற்கையாக ஹிட்டாக்கி விட முடியும். அதை செய்ய நான் தயாராக இல்லை. பாடலுக்கான வாய்ப்புகள் வரும்போது நானும் கொண்டாடப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் சாம் சி.எஸ்.




