எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபாஸ் ஜோடியாக தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரத்திங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் கூடிய சீக்கிரமே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் திருமணம் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அந்த கேள்விக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் சுமுகமான உறவு இருந்து கொண்டிருப்பதாகவும் எங்கள் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.