ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி தாய்லாந்தில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடியது. அங்கிருந்து அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நேற்றுடன் அவர்களது ஹனிமூனை முடித்துவிட்டு, அதற்காக நன்றிக் குறிப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். ஹனிமூனை ஏற்பாடு செய்து தந்த டிராவல் ஏஜென்சி, தங்கியிருந்த ஹோட்டல், அந்த ஹோட்டலின் செப் என அனைவருக்கும் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துள்ளார் விக்கி. அற்புதமான சூழலுக்காகவும், சிறப்பான உணவுக்காகவும் மீண்டும் ஒரு முறை வருவோம் என மனதாரப் பாராட்டியுள்ளார் விக்கி. வழக்கம் போல மனைவி நயன்தாராவுடனான சில பல புகைப்படங்களும் அந்தப் பதிவில் அடக்கம்.