அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் 'குபேரா' நடிகர்! | பிளாஷ்பேக்: 'ஊர்வசி' விருது வென்ற முதல் தென்னிந்திய நாயகியைத் தந்த “துலாபாரம்” | 'அப்புச்சி கிராமம்' இயக்குனருடன் கைகோர்த்த நிதின்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்! | 'மங்காத்தா' முன் நிற்க முடியவில்லை: 'திரெளபதி 2' இயக்குனர் வருத்தம் | 'பாபா' படத்தினால் மாறிய 'பகவதி' பட கிளைமாக்ஸ்! | சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்? | தனுஷ் தந்த ஐடியாவின் மூலம் இயக்குனர் ஆனேன் : கென் கருணாஸ்! | ராம் சரணின் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? | 'வாரணாசி' படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகை! |

கடந்த 2015ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் பிக்கெட் 43'. ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் தொடர்ந்து ராணுவ படங்களாக இயக்கி வரும் இயக்குனர் மேஜர் ரவி இயக்கத்தில் இந்த படம் வெளியானது. வழக்கமான ராணுவ படங்களில் இருந்து மாறுபட்டு எல்லையை பாதுகாக்கும் ஒரு இந்திய ராணுவ வீரனுக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரனுக்கும் ஏற்படும் உணர்வுப்பூர்வமான நட்பையும் இந்த இரண்டு வீரர்களுமே பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என தங்கள் உயிரை கொடுத்து போராடுவதையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது. அதனாலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் இந்த படம் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தை தற்போது மீண்டும் எதேச்சையாக பார்த்துள்ளார். இதை பார்த்தவுடன் தனது நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் மேஜர் ரவிக்கு சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அதில், "என்ன ஒரு அருமையான படம். மேஜர் ரவி சார் இதேபோன்று இன்னொரு படம் பண்ணுங்கள். நான் வேண்டுமென்றால் பிரித்விராஜிடம் சொல்லி இப்படி ஒரு படம் இயக்குமாறு உங்களிடம் கோரிக்கை வைக்க சொல்லவா ? என்று கேட்டுள்ளார். பொதுவாக ரசிகர்கள் ஒரு படத்தின் இயக்குனருக்கு இதுபோன்று கோரிக்கை வைப்பதை தாண்டி ஒரு இயக்குனரான அல்போன்ஸ் புத்ரனே இப்படி ஒரு இயக்குனருக்கு கோரிக்கை வைத்து இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.