தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் கதை களத்தில் ராமாயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தொடர்ந்து ராஜமவுலி தொடர்ந்து பாலிவுட் நடிகைகளை ஹிந்தி மார்கெட்டுக்காக பயன்படுத்தி வருகிறார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.