விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி சமந்தா, நாக சைதன்யா ஜோடி.
நாக சைதன்யா தற்போது ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை சமந்தாவின் பிஆர் டீம் பரப்பி வருவதாக நாக சைதன்யா ரசிகர்கள் குற்றம் சாட்டுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது பற்றிய செய்தி ஒன்றைப் பகிர்ந்து சமந்தா காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள், நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், போங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மேஜர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.