ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி சமந்தா, நாக சைதன்யா ஜோடி.
நாக சைதன்யா தற்போது ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை சமந்தாவின் பிஆர் டீம் பரப்பி வருவதாக நாக சைதன்யா ரசிகர்கள் குற்றம் சாட்டுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது பற்றிய செய்தி ஒன்றைப் பகிர்ந்து சமந்தா காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள், நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், போங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மேஜர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.