இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‛காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். 2006ல் வெளியான புதுப்பேட்டை படமும், 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இன்றளவும் பேசப்படுகிறது. இதன் 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டபோது, 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும். அதில் முதலில் புதுப்பேட்டை 2 வரும் என்றார்.