சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‛காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். 2006ல் வெளியான புதுப்பேட்டை படமும், 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இன்றளவும் பேசப்படுகிறது. இதன் 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டபோது, 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும். அதில் முதலில் புதுப்பேட்டை 2 வரும் என்றார்.