'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‛காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். 2006ல் வெளியான புதுப்பேட்டை படமும், 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இன்றளவும் பேசப்படுகிறது. இதன் 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டபோது, 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும். அதில் முதலில் புதுப்பேட்டை 2 வரும் என்றார்.