சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் ‛‛காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி ஏற்றி சென்ற முஸ்லீம் நபர் கொல்லப்படுவதும் இரண்டுமே மத வன்முறை தான். மதங்களை கடந்து மனிதர்களாய் இருப்போம்'' என கூறினார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ஜதராபாத்தில் இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛சாய் பல்லவியை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். பெண்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா. நல்ல மனிதனாக இருங்கள் சொன்னால் உடனே தேச விரோதி என முத்திரை குத்துகிறார்கள். வெறுப்பை உமிழ்பவர்களை ஹீரோக்கள் என்கிறார்கள். எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.