அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
சாய்பல்லவி நடித்துள்ள விராட பருவம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார் சாய்பல்லவி. இதன் ஒரு பகுதியாக சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் மதங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் இரண்டுமே மதவன்முறை தான். மதத்தின் பெயரால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை பசு காவலர்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவரின் இந்த கருத்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.