10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படத்தில் வலுவான திரைக்கதையை அமைக்காததால், இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ் .ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியிலிருந்து ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. அதோடு இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளனர்.




