என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நெல்சன் இயக்கும் படங்களில் காமெடியன் ரெடின் கிங்ஸ்லே தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், அடுத்து ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ரஜினியின் 169வது படத்திற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் நெல்சன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது முதல் பாதிதான் எழுதி முடித்திருக்கிறார். முக்கியமாக ரஜினி படம் என்பதால் வெறித்தனமாக இந்த ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் நெல்சன். மேலும் மொத்த கதையும் எழுதி முடிந்த பிறகுதான் எந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று அவர் முடிவு செய்வார். அதனால் கதை வேலைகள் முடிந்த பிறகுதான் ரஜினி படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது தெரியவரும் என்று கூறி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லே. தற்போது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் காபி வித் காதல் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.