தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ராஜமவுலியின் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்து உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது ஆதிபுருஸ், சலார் போன்ற புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸுக்கு பெண் பார்த்தாகி விட்டதாகவும், இந்த ஆண்டு கண்டிப்பாக அவருக்கு திருமணம் நடைபெற்று விடும் என்றும் டோலிவுட் மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரபாஸின் உறவினர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து கொண்டார்கள். அதன் பிறகும் பிரபாஸ் திருமணம் குறித்து பல தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு கண்டிப்பாக பிரபாஸிற்கு திருமணம் நடைபெற்று விடும் என்று அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தெரிவித்திருப்பதால் இன்னும் சில மாதங்களில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிரபாஸே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.