திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமணம் நாளை(ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் கடற்கரை ஓரம் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் படமாக்கி அதை ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதன் காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நேற்று திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மருதாணி நிகழ்ச்சி குறித்த தகவல் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.