போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமணம் நாளை(ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் கடற்கரை ஓரம் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் படமாக்கி அதை ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதன் காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நேற்று திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மருதாணி நிகழ்ச்சி குறித்த தகவல் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.