இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமணம் நாளை(ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக மகாபலிபுரம் கடற்கரை ஓரம் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் மூலம் படமாக்கி அதை ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதன் காரணமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நேற்று திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மருதாணி நிகழ்ச்சி குறித்த தகவல் அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.