கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும், அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். சமீபத்தில் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இஞ்ஜினியர் ரியாஸ்தீனுகும் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து சென்னையை தாண்டி ரஹ்மானுக்கு சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலம் கொண்ட இடத்தில் பிரம்மாண்டமாய் திருமண வரவேற்பை நடத்தினார். இதில் ரஹ்மானிடம் இசை பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் அவருடைய இசை கலைஞர்களே மட்டுமே பங்கேற்றனர். மேலும் திரையுலகில் இருந்து பின்னணி பாடகி பி.சுசீலா மட்டுமே இந்த திருமண வரவேற்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் ஜூன் 10ம் தேதி மகளின் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாய் நடத்த உள்ளார் ரஹ்மான். கும்பிடிப்பூண்டி அருகே ரஹ்மானுக்கு சொந்தமான இடத்தில் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் முக்கிய விஐபி.க்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.