ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? |

நடிகை மற்றும் மாடாலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார். இதன் காரணமாக இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையையும் எதிர்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், 'என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள் கூட பரிதாப்பட்டு வருகிறார்கள்.