சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பிரபல மாடலான மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நீதிபதி எஸ். அல்லி அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மீரா மிதுன் ஆஜராகாததால் அவரை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டார். சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பிரபலம் தேடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த அவர், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.