'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மாடலான மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நீதிபதி எஸ். அல்லி அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மீரா மிதுன் ஆஜராகாததால் அவரை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டார். சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பிரபலம் தேடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த அவர், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.