ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சின்னத்திரையிலிருந்து மேயாதமான் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, பத்து தலை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், பொம்மை என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறா. இந்த நிலையில் பிரியா பவனி சங்கர் அளித்த ஒரு பேட்டியில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இன்னும் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதால் நடிப்பில் தற்போது தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது என்று கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.