தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சின்னத்திரையிலிருந்து மேயாதமான் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, பத்து தலை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், பொம்மை என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறா. இந்த நிலையில் பிரியா பவனி சங்கர் அளித்த ஒரு பேட்டியில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இன்னும் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதால் நடிப்பில் தற்போது தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது என்று கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.