தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகத்தான் முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு வெளியீட்டுத் தினத்தன்று மிக மிக அதிகமான பரபரப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் தான் அப்படிப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்கள். அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்து தமிழில் கடைசியாக வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகள் நடைபெறவில்லை. எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் காலை சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது. அதற்குக் கூட பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
ஆனால், லோகேஷ் கனகராஜ், அனிருத், விஜய் சேதுபதி, பகத் பாசில் என இப்போதைய பரபரப்பு கலைஞர்களுடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்திருப்பது அவருடைய படங்களுக்கான கமர்ஷியல் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. 'விக்ரம்' படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 500 ரூபாய் என அநியாய விலையில் விற்கப்பட்டாலும் கமல்ஹாசன் ரசிகர்கள் அதை பெருவாரியாக வாங்கிவிட்டார்கள். படம் வெளியாகும் ஜுன் 3ம் தேதி நாளன்று மட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பல தியேட்டர்களில் முன்பதிவு சிவப்பில் தான் காட்டுகிறது.
புதிதாக முன்பதிவை ஆரம்பித்துள்ள தியேட்டர்களில் மட்டும் டிக்கெட்டுகள் இருக்கின்றன. இப்படி ஒரு ஆரம்ப கட்ட வரவேற்பை கமல்ஹாசன் எதிர்பார்த்திருக்கவே மாட்டார் என கோலிவுட்டில் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் மகிழ்கிறார்கள்.