25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்தது விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். தெலுங்கு, இந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் மாளவிகா, அங்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களையும அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் அந்த சுற்றுலாவில் ஒரு சிறு மாற்றமாக நமது நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்துள்ளார் மாளவிகா. இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் இருப்பதை கேள்விப்பட்டதில் இருந்தே இங்கே சபாரி போக வேண்டும் என்பது தனது ஆசையாக இருந்ததாக கூறியுள்ள மாளவிகா, இந்த வன பயணத்தின்போது இரண்டு புலிகளையும் ஒரு சிறுத்தையையும் மிக அருகில் பார்த்ததாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.